யாரிடமும் கையேந்த மாட்டோம் .. கூறுகிறது பா.ம.க
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் சீட்டுக்காக யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டைத் தொகுதியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தயவு இல்லாமல் யாரும்தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது. 98 ம் ஆண்டு 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடத்தைக் கைப்பற்றினோம்.
கட்சியைக் கரை சேருங்கள் என்று யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் பா.ம.க.வுக்கு இல்லை. இன்று தமிழகத்திலுள்ள மிகப்பெரிய கட்சிகளில்பா.ம.க.வும் ஒன்று.
காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவதுதான் எங்கள் குறிக்கோள் என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிவைத்துக் கொண்டுள்ளனர்.
தற்போதைய அரசியலில் யார் எங்கே? எப்போது காணாமல் போவார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது. அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம்அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான்.
மற்ற கட்சித் தலைவர்களைத் திட்டுவது பாட்டாளி மக்கள் கட்சியின் வேலையல்ல. பாட்டாளி மக்கள் கட்சி 1989 ம் ஆண்டு பத்து லட்சம் மக்களைக்கூட்டி வந்து தொடங்கப்பட்டது. மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் நோக்கம் என்றார் ராமதாஸ்.