கருணாநிதி என்றொரு "இளைஞர் ...
சென்னை:
ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு முதல்வர் கருணாநிதி, சனிக்கிழமை தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளைக்கவனித்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக டாக்டர்கள் அறிவுரைப்படி முதல்வர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக ஓய்வு எடுத்துவந்தார். தனது மதுரை மாவட்ட சுற்றுப்பயணத்தையும் இதன் பொருட்டு ரத்து செய்தார்.
ஒரு வார ஓய்வுக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் பணிகளைக் கவனிக்கத் துவங்கினார் கருணாநிதி. சனிக்கிழமைமாலை லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் திறப்பு விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
கடந்த வாரம் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதி மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். இதையடுத்து அவரை ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
ஓய்வுக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய முதல்வரை, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, டி.ஜி.பி. ராஜகோபாலன்ஆகியோர் சென்று பார்த்தனர்.
பின்னர் ராஜகோபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக முதல்வருடன்விவாதித்தேன். வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கை நிச்சயம் வெற்றி பெறும் என்று முதல்வர் நம்பிக்கைதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications