For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசு வதையைத் தடுக்க பசு பாதுகாப்பு இல்லம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

பசு வதையைத் தடுக்க 25 ஏக்கர் நிலப்பரப்பில் பசுக்கள் தங்கும் இடம் ஒன்றை ஜெயின் சேவா மண்டல் என்றஅமைப்பு கோவையில் துவங்கியுள்ளது.

ஸ்ரீ சுபரஷ்வாநாத் ஜெயின் சேவா மண்டல் என்ற அமைப்பின் தலைவர் பிரவீன் குமார், ரத்தன் சர்த் போத்ராஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பசு வதையைத் தடுக்க பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகள் ஒருங்கிணைந்து முயற்சிமேற்கொண்டு வருகின்றன. இந்த பயற்சியின் பலனாக கோவை அருகே 17 கிலோமீட்டர் தொலைவில் பசுபாதுகாப்பு இல்லம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள இந்த இடம் 25 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது. இதனை ரூ. 50 லட்சம்செலவில் வாங்கியுள்ளோம்.

இங்கு பால் தருவதற்குக்கூட பயனற்று போன அடிமாடுகளை பாதுகாக்க முடிவு செய்துள்ளோம். இந்தநிலப்பரப்பில் 800 மாடுகள் வரை பாதுகாக்கப்படும்.

இந்த மாடுகள் இயற்கை மரணம் வரை இங்கேயே நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.கோவையிலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் மாடுகள், மோசமான முறையில் கொண்டுசெல்லப்படுகின்றன. இவற்றைத் தடுக்க முயற்சி செய்வோம்.

மகாவீர் ஜெயந்தியின் 2600ம் ஆண்டை முன்னிட்டு, அதனைக் கொண்டாட மத்திய அரசு நூறு கோடி ரூபாய்ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கென ஒரு கமிட்டியும் அமைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அஹிம்சையை தொடர்ந்துவலியுறுத்துவோம். பிப்ரவரி மாதம் இந்த ஜெயந்தி விழா கொண்டாடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X