சிதம்பரத்தில் ஆருத்ர தரிசனா விழா
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன விழா நடந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
இங்குள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ர விழா நடந்ததையொட்டி தேர்த் திருவிழா நடைபெற்றது. நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேஸ்வரர், வினாயகர், முருகன்ஆகிய 5 சாமி சிலைகளை ஆபரணங்களால் அலங்காரம் செய்து அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் வைத்து பக்தர்கள் வீதி வழியாக இழுத்துச் சென்றனர்.
பின்னர் திங்கள்கிழமை ஆருத்ர தரிசன விழா நடந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாம சுந்தரிக்கும் அதிகாலையில் இருந்து மகாஅபிஷேகம் நடைபெற்றது.
நடராஜ மூர்த்தியும், சிவகாம சுந்தரியும் ஆயிரங்கால் மண்டபத்தில் திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்கள். இந்த தரிசன விழாவில்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்கள்.
விழாவில் பாராயணம், வேத பாராயணம், திருவெம்பாவை உற்சவம் ஆகியவை நடைபெற்றன. விழா முன்னிட்டு சுகாதார ஏற்பாடுகளை சிதம்பரம்நகரசபை அதிகாரிகள் செய்து இருந்தனர். பல்வேறு பொதுநல சேவை சங்கங்கள் பக்தர்களுக்கு முதல் உதவி மற்றும் குடிதண்ணீர் வசதிகள் செய்து இருந்தன.












Click it and Unblock the Notifications