சென்னை மீனவர்கள் ஆந்திராவில் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திரா அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 70 பேரை ஆந்திர மாநில மீனவர்கள்சிறை பிடித்தனர்.

சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள் 70 பேர் காசிமேடு துறைமுகத்திலிருந்து சென்ற 1-ம் தேதி ஆந்திரமாநிலத்திற்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நெல்லூர் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நெல்லூருக்கு அருகே இருக்கும் திங்கா பள்ளிமீனவக் குப்பத்திலிருக்கும் 100-க்கும் அதிகமான மீனவர்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

இதன் காரணமாக இரு மாநில மீனவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆந்திர மீனவர்கள், தமிழகமீனவர்களைப் பிடித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த லட்சக் கணக்கான இறால் மீன்களையும், அவர்களிடமிருந்தநகைகளையும் பறித்து கொண்டு அவர்களையும் சிறை பிடித்தனர்.

இது பற்றி சென்னைக்கு தகவல் வந்தது. தமிழக விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரையும்மீன்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து இந்த தகவல்களை கூறி சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து மனு கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+