மே.வங்காளத்தில் பந்த்: வன்முறையில் 24 பேர் காயம்
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்திருந்த பந்த்தையொட்டி நடந்தவன்முறையில் 24 பேர் காயமடைந்தனர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சுசந்தா கோஷ் தெரிவித்தார்.
வன்முறையில் காயமடைந்தவர்கள் அனைவரும் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள். 34 பஸ்கள் அடித்துஉடைக்கப்பட்டன. இவற்றில் 24 பஸ்கள் அரசு பஸ்கள். சில பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
வேலைநிறுத்தப் போராட்டம் குறித்துத் தெரியாத பேரூந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அலிப்பூர் நகரில் 6பஸ்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சி ஆகியோர் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டக் கோரியும், திரிணாமூல் காங்கிரஸ்தொண்டர்களை தாக்குவதைக் கண்டித்தும் இந்தப் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
மேலும் தலைநகர் கொல்கத்தா உள்பட பிற இடங்களில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை விடப்பட்டுள்ளது. சோட்டிப்பூர், பாராசத், நயாகடி போன்ற நகரங்களில் சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
யு.என்.ஐ.