எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய தயார்: கண்ணன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 3 எம்.எல் ஏ.க்களின் பதவியை பறித்து, சபாநாயகர் பிறப்பித்தஉத்தரவு செல்லாது என நீதிமன்றம் அறிவிக்காவிட்டால் எனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்வேன் எனபாண்டிச்சேரியின் முன்னாள் அமைச்சர் கண்ணன் கூறியுள்ளார்.
இது பற்றி கண்ணன் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ராஜசேகரஉடையார், ஏழுமலை ஆகியோர் மீது சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துன்ளனர்.
இந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. பாண்டிச்சேரி அரசு அவகாசம் கேட்டதால் விசாரணைஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்வேன்.
பாண்டிச்சேரியில் சாராய ஆலை உரிமத்தை தனியாருக்கு உரிமம் வழங்குவதில் கோடிக்கணக்கான பேரம்பேசப்பட்டுள்ளது அதை பங்கு பிரிக்கும் வேலையும் நடந்து வருகிறது.
தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் சாராய உரிமம் வாங்க வேண்டியதன் அவசரம் என்ன? பல பணிகள்உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்தாதது ஏன்? சாராயதொழிற்சாலைக்கு உரிமம் வழங்கினால் நான் சி.பி.ஐ. விசாரணை கோருவேன் என கூறினார்.