ரேஷன் கடை ஊழியர்கள் 8 ம் தேதி வேலைநிறுத்தம்
சென்னை:
சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 ம் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் தமிழகத்தில் வேலைநிறுத்தப்போராட்டம் செய்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு நிறுவன ஊழியர் மாநில சங்கங்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆழ்வாரப்பன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடுகூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், 240 நாட்கள் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்தி காலமுறை சம்பளம்வழங்க வேண்டும், பென்ஷன் வழங்க வேண்டும் உள்பட 9 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையறையற்ற போராட்டத்தில்ஈடுபடவுள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 26 ஆயிரம் ரேஷன் கடைகள், 32 கூட்டுறவு ஸ்டோர்கள் மற்றும் மண்ணெண்ணெய் பல்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள்மூடப்படும். இவைகளில் வேலைபார்க்கும் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.