For Daily Alerts
Just In
ராணுவ வீரர்கள் தாக்குதலில் 20 புலிகள் பலி
கொழும்பு:
இலங்கையில் வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சரசாலை பகுதியில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 விடுதலைப்புலிகள் வெள்ளிக்கிழமைகொல்லப்பட்டனர்.
திரிகோணமலையிலிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள மோரவேவாவில் புலிகள் தாக்குதல் தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். முகாமலைஎன்ற இடத்தில் விடுதலைப்புலிகள் மோர்ட்டார் வெடிகுண்டுகள் வைத்துத் தாக்குதல் நடத்தியதில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
முகாமலையில் நடந்த இன்னொரு தாக்குதலில் 4 பெண் புலிகள் உள்பட 5 புலிகள் கொல்லப்பட்டனர். வேலியோயா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள்தாக்குதல் நடத்தியதில் ‘15 புலிகள் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
Story first published: Friday, January 5, 2001, 5:30 [IST]