ஜன.7 ல் வியட்நாம் செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் ஜனவரி 7 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக வியட்நாம் மற்றும் இந்தோனேசியா செல்கிறார்.
இந்தியாவுக்கும், இந்தோனேசியா மற்றும் வியட்நாமுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என்றுவெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாமுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை. அதே போல் கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகுஇந்தியப் பிரதமர், இந்தோனேசியா செல்கிறார்.
முன்னதாக 1999 ம் வருடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர் வியட்நாமுக்குச்சென்றனர்.
தற்போது பிரதமர் வாஜ்பாயின், வியட்நாம் மற்றும் இந்தோனேசிய சுற்றுப்பயணம் சம்பந்தப்பட்ட நாடுகளின் உறவை மேம்படுத்தும் வகையில்இருக்கும்.
பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கல்வி, அறிவியல் துறைகளில் இரு நாடுகளுடனும் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதுகுறித்து பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் போது விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாமில் பிரதமர் வாஜ்பாய், வியட்நாம் பிரதமர் பான் வான் கைய், தலைவர் டிரான், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர்ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.
மேலும் வியட்நாம் சுற்றுப்பயணத்தின் போது, பாதுகாப்பு, அறிவியல், தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவும், வியட்நாமும்இணைந்து செயல்படுவது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications