For Daily Alerts
Just In
ப்ளஸ் டூ தேர்வு: விடைத்தாள் நகல் கிடைக்க ஏற்பாடு
சென்னை:
தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் விடைத்தாள்களின் ஜெராக்ஸ் காப்பியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
தமிழகத்தில் 2001 ம் ஆண்டு முதல் ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவ மாணவியர் இயற்பியல், வேதியியல், கணிதம், மற்றும் உயிரியல் பாடங்களில் தங்கள்விடைத்தாள்களைப் பெற்றுக் கொள்ள முடியும். விடைத்தாள் ஒன்றுக்கு ரூ 50 செலுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ 400 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழகத்தில் மறுமதிப்பீடு வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, January 7, 2001, 5:30 [IST]