தாக்குதலால் 10 லட்சம் நஷ்டம்.. கூறுகிறார் கிருஷ்ணசாமி
சென்னை:
சென்னையில் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதில் ரூ 10 லட்சம் பெறுமானமுள்ள பொருட்கள் நஷ்டமடைந்தது என புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னையில் நான் குடியிருக்கும் வீடு வாடகை வீடுதான். கட்சி அலுவலகம் என்று தனியாக வைத்து நடத்தக் கூடிய அளவுக்கு என்னிடம் வசதி கிடையாது.அதனால்தான் என் வீட்டையே அலுவலகமாக நடத்தி வருகிறேன்.
நான் மதுரைக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து 60 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் ஒருஉயர் போலீஸ் அதிகாரி இருக்கிறார். அது எனக்குத் தெரியும்.
எங்கள் அலுவலகத்துக்கு வந்து பேக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின், டெலிபோன் ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டுப் போய் விட்டார்கள்.கட்சிப்பணம் ரூ 2 லட்சத்தையும் திருடிச் சென்று விட்டார்கள். இந்தத் தாக்குதலில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரியை உடனடியாக நீக்கக் கோரி மாவட்டக் கலெக்டர் அலுவலம் முன் வரும் ஜனவரி 11 ம் தேதிபுதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications