கிரகணம் என்பது என்ன?
சென்னை:
கிரகணங்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று இரண்டகாப் பிரிக்கப்பட்டுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வருவது சூரியகிரகணமாகும். சந்திரன் விலகும் வரை சூரியன் மறைக்கப்பட்டிருக்கும்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும்.
இந்த கிரகணங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் எல்லா சமயங்களிலும் தெரிவதில்லை. கிரகணங்களின் சுற்றுப்பாதையில் மேற்கூறுய குறுக்கீடுநேரத்தைப் பொறுத்து கிரகணங்கள் அமைவதால் இவை சில நாடுகளில் மட்டுமே தெரிகின்றன.
இந்த ஆண்டு (விக்ரம) முதல் பூரண சந்திரகிரஹணம் 16.07.2000 அன்று நிகழ்ந்தது.
இரண்டாவது சந்திர கிரகணம் 9.1.2001, பெளர்ணமி, செவ்வாய்கிழமை அன்று நிகழ்கிறது,
இந்த கிரகணமும் இந்தியாவில் தெரியும்.
கிரகணம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணி 12 நிமிடத்திற்கு தொடங்கி அதிகாலை 3 மணி 29 நிமிடத்திற்கு முடிவடையும்.
இந்த சந்திர கிரகண் இந்தியாதவிர மேற்கு ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வடக்கு கனடா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளிலும்தெரியும்