வீரப்பன் எங்கும் போகவில்லை..கூறுகிறார் டி.ஜி.பி.
சென்னை:
வீரப்பன் இந்தியாவை விட்டு தப்பி விட்டார் என்று கூறுவதில் சிறிதளவும் உண்மையில்லை என்று தமிழக போலீஸ் டைரக்டர் ஜெனரல் ராஜகோபாலன்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் நவீனப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
வீரப்பனைப் பிடிப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸார் தானாகவே காட்டுக்குள் செல்ல மாட்டார்கள். கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்குதேவைப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் காட்டு எல்லையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
வீரப்பன் இந்தியாவை விட்டே தப்பி விட்டார் என்று கூறுவது வெறும் புரளி. அதில் சிறிதளவும் உண்மையில்லை. அவர் சத்தியமங்கலம் காட்டில்தான்ஒளிந்திருக்கிறார். அவரை மிக விரைவில் கண்டுபிடித்து விடுவோம். அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டு அதிரடிப்படை போலீஸார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படைப் போலீஸார் கண்டிப்பாக வெற்றிபெற்றே தீருவார்கள் என்றார் ராஜகோபாலன்.
யு.என்.ஐ.