For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலோரக் காவல் படை கோருகிறது புதுவை

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

தீவிரவாதிகள் நடவடிக்கையை தடுப்பதற்காக கடற் படையை அமைக்க வேண்டும் என பாண்டிச்சேரி நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளதுஎன முதல்வர் சண்முகம் கூறியுள்ளார்.

டெல்லியில் மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு பாண்டிச்சேரி திரும்பிய பின் நிருபர்களிடம் பேசிய சண்முகம் கூறியதாவது:

கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த நவீன ஆயுதங்கள் வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறேன். இது குறித்து மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானியிடம் பேசியிருக்கிறேன்.

பாண்டிச்சேரி காவல் துறையை நவீனபடுத்துவது குறித்தும், காவல் துறையை பலப்படுத்த மேலும் போலீசாரை சேர்க்க வேண்டும் என்பது குறித்தும்,தமிழகத்தில் கொடுக்கப்படுவது போல பாண்டிச்சேரியிலும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான உதவித் தொகையை அதிகப்படுத்தப்பட வேண்டும்எனவும் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

மத்திய உள்துறை அமைச்சர் என் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். பாண்டிச்சேரியின் முதன்மைச் செயலாளர்இந்த பணிகளை விரைவு படுத்துவதற்காக டெல்லியில் தங்கியிருக்கிறார்.

பிரான்ஸ், மலேசியா மற்றும் இலங்கை அரசுகள் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிதகளில் ரூ 3,000 கோடி செலவில் நடைபெறவிருக்கும் துறைமுகமுன்னேற்ற பணிகளில் பங்கு கொள்ள அதிக ஆர்வம் செலுத்துகின்றன.

வெளி நாட்டவர்கள் இந்த பணிகளில் ஈடுபடுவதில் எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. உ.யர் அதிகாரிகள் இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு தூதருடன் இது குறித்து அடுத்தவாரம் பேச்சு வார்த் நடத்துவார் என கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X