அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பின் வாக்காளர் பட்டியல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் ஆலோசனை செய்த பின்புதான் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும் என்று மதச்சார்பற்ற கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
புதன்கிழமை பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
வரும் சட்டசபைத் தேர்தலில் கள்ள ஓட்டைத் தடுக்கும் வகையில் அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம்முயற்சி எடுக்க வேண்டும்.
பாண்டிச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு வேறு மாநிலங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாகக் கூட்டத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க, த.மா.கா., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஆகிய கட்சிகள்பங்கேற்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications