For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர கலைஞருக்கு சங்கீத சாம்ராட் விருது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

பாரதிய வித்யாபவன் சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும் சங்கீத சாம்ராட் என்ற விருது இந்த ஆண்டு ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த நேதுநூரடு கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.

பாரதிய வித்யாபவன் ஆண்டு தோறும் சங்கீத சாம்ராட் என்ற பட்டத்தை வழங்கி வருகிறது. லால்குடி ஜெயராமன்,டி.கே பட்டம்மாள், பாலமுரளிக் கிருஷ்ணா, கோவிந்தராவ், நாராயணசாமி ஆகியோர் இந்த விருதுபெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வரிசையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இந்தஆண்டு சங்கீத சாம்ராட் பட்டத்தைப் பெறுகிறார்.

கோவையில் நடக்கும் நான்கு நாள் பொங்கல் கலை விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.கிருஷ்ணமூர்த்தி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இப்போது வயது 73.

அன்னமாச்சாரியார் பாடல்களைப் பாடியதால் பெரும் புகழை அடைந்தார். இதே போன்று இவர் பாடியதால்அன்னமாச்சாரியார் பாடல்கள் பெரும் புகழ் அடைந்தன. இசைக் கல்லூரி ஒன்றில் இவர் முதல்வராகப்பணியாற்றியுள்ளார்.

பாரதிய வித்யா பவன் ஆண்டு தோறும் பொங்கலை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்தநிகழ்ச்சிகளில் சங்கீத இசை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 12 முதல்16 வரை நடக்கும் நான்கு நாள் நிகழ்ச்சியில் காலையில் பிரபலங்களின் இசை மற்றும் இலக்கியசொற்பொழிவுகளும், மாலையில் அறிமுகமாகும் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X