கோமாவில் காங். தலைவர் ஜிதேந்திர பிரசாத்
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர பிரசாத் உடல்நிலை மோசமான நிலையில் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் கோமா நிலையில் உள்ளார்.
டாக்டர் விஜய் ஷீல் குமார் தலைமையில் கைதேர்ந்த டாக்டர்கள்குழு ஒன்று ஜிதேந்திர பிரசாத்துக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
ஜிதேந்திர பிரசாத்தின் சகோதரர் ஜெயேந்திர பிரசாத் தன் சகோதரர் கோமா நிலையில் இருக்கிறார் என்று தெரிந்ததும் அவர் மயக்கம் போட்டுவிழுந்தார்.
அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் நிலையில் நல்ல முன்னேற்றம்காணப்படுகிறது. அவரும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலில் ஜிதேந்திர பிரசாத் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து அப்பல்லோமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில்வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 8 ம் தேதி ராம் மனோகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
யு.என். ஐ.












Click it and Unblock the Notifications