For Daily Alerts
Just In
சென்னை ரயிலில் வெடிகுண்டு புரளி
சென்னை:
பெங்களூர் - சென்னை ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:
சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் ரயில்வே போலீஸாருக்குதொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் வில்லிவாக்கம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் ரயிலில்ஏறி சோதனை செய்தனர். சோதனை முடிவில் அப்படி வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. இதனால் பெங்களூர் வந்த ரயில்ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, January 11, 2001, 5:30 [IST]