சத்தியமூர்த்தி விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்
சென்னை:
ரூ. 53.50 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர்சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவியை தனி நீதிமன்றம்விடுதலை செய்ததை எதிர்த்து தமிழக அரசு சென்னைஉயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அப்பீல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.ராமமூர்ததி,சத்தியமூர்த்தி, அவரது மனைவி சந்திரா ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், தெள்ளத் தெளிவாக பலசாட்சியங்களை அரசுத் தரப்பு நிரூபித்தும் கூட அதை தனி நீதிபதிகவனத்தில் கொள்ளத் தவறி விட்டார்.
சத்தியமூர்த்தி, வருமானத்திற்கு மீறிய வகையில், சொத்துக்களைக்குவிப்பதற்கு சந்திரா துணை போயிருப்பதும், சத்தியமூர்த்திசார்பாக அவர் சொத்துக்களைச் சேர்த்ததும் தெளிவாகநிரூபிக்கப்பட்டும் கூட அதை தனி நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
முன்னதாக ஆகஸ்ட் 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தனி நீதிமன்றநீதிபதி ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி மற்றும் சந்திராவைவிடுவித்து தீர்ப்பளித்தார்.