For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை.. அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தால் மாஞ்சோலை எஸ்டேட் உரிமையாளர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 1999 ம் ஆண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களதுகோரிக்கைகளில் முக்கியமான ஒன்று சம்பளம் கொடுக்காதது ஆகும். இதையடுத்து அவர்கள் போராட்டம் நடத்திய போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

முன்னதாக 3 வருடங்கள் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வரும் மாஞ்சோலை எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக தமிழக அரசு உயர் மட்டக் குழுவினர் கூடி விவாதித்து மாஞ்சோலை எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கைஎடுப்பது குறித்து விவாதித்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக மாஞ்சோலை எஸ்டேட் ஊழியர்கள் தேயிலை உற்பத்தி செய்யாமல் உள்ளனர். இதனால் ஏராளமான மக்களுக்குவேலைவாய்ப்பு இல்லை. இப்பிரச்சனையில் அரசு தலையிட்டதால் தேயிலை உற்பத்தியை மாஞ்சோலை உரிமையாளர்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர். சிலதொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வந்துள்ளனர்.

மேலும் அரசு வற்புறுத்தலின்படி ஊழியர்களுக்கு சம்பள பாக்கியைக் கொடுப்பதாக மாஞ்சோலை தோட்ட உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.இருப்பினும் அவர்கள் சம்பள பாக்கியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன், அவரை விடுவிக்க வேண்டுமானால் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போதுஉயிரிழந்தவர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X