தமிழக சிறார் தொழிலாளர்கள் கர்நாடகத்தில் மீட்பு

Subscribe to Oneindia Tamil

ஷிமோகா (கர்நாடகா):

தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளிகள் கர்நாடகா மாநிலம் ஷிமோகாவிற்குஅருகே மீட்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி சாகர் உதவிக் கோட்ட உதவி ஆட்சியர் முஜீப் அகமது கூறுகையில்,தமிழகத்தின் இருமடை என்ற பகுதியில் உள்ள சமூக சேவை அமைப்பினர் கொடுத்தகடிதத்தை அடிப்படையாகக் கொண்டு ஷிமோவின் கலெக்டர் கணேசன் எடுத்தநடவடிக்கை எடுத்தார்.அப்போது சாகர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில்தமிழகத்தைச் சேர்ந்த 18 குழந்தை தொழிலாளிகள் மீட்கப்பட்டனர்.

இது குறித்து விசாரணை செய்ய விரைவில் போலீசார் தமிழகம் செல்வார்கள்.சிறுவர்களை கடத்தியதாக கூறப்படும் 9 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சிறுவர்கள் ஈரோடு. சேலம், நாமக்கல், திருப்பூர், போச்சமடை பகுதியைச்சேர்ந்தவர்கள். இந்த சிறுவர்களின் பெற்றோரிடம் பணம் கொடுத்து சிலரையும்,மேலும் சிலரை இவர்கள் கடத்தி வந்துள்ளனர்.

மீனவர்கள் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை மீன் பிடிக்க வலை விரிப்பார்கள்.குழந்தைகள் அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை வலையில் இருக்கும்மீன்களை சேகரித்து வைக்க வேண்டும்.

மீட்கப்பட்டவர்கள் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் சில ர்கொத்தடிமைகளாக இருக்கின்றனர். இவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்எனகூறினார்.

மீனவர்களுக்கு கட்டுப்படாத சிறுரவர்களுக்கு கால்களில் சூடுவைக்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கு நகரத்து வாழ்க்கை,பழக்க வழக்கங்கள் தெரியவாய்ப்பில்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மீனவர்கள் மட்டும் நகரத்திற்குசென்று மீன்களை விற்று வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+