For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூர் தீ விபத்தில் 54 குடிசைகள் நாசம்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

திருப்பூரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 54 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

திருப்பூர் அருகே புளியக்காடு என்ற இடத்தில் குடிசைகள் அதிகம் உள்ளன. இங்குதங்கியிருப்பவர்கள் வெளியூரிலிருந்து திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருபவர்கள்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்காக பெரும்பாலானோர் ஊருக்குச் சென்றுவிட்டனர். அப்போது குடிசை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குடிசைகள் மளமளவென எரியத் தொடங்கின.

இதில், 54 குடிசைகள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த தீயணைப்பு படையினர்சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்தில் 17 சைக்கிள் உட்பட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துபோனது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்துஆராய்ந்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X