பாண்டி.யில் நர்ஸ்கள் குடும்பத்துடன் போராட்டம்
பாண்டிச்சேரி:
நீதி கோரி, பாண்டிச்சேரி மாநில சுகாதாரத் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் குடும்பத்துடன் போராட்டம்நடத்தப்பட்டது.
பாண்டிச்சேரி தலைமைச் செயலகம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில், ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த பலர்குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நர்ஸ்கள் சிலரும் இதில் பங்கேற்றனர்.
பாண்டிச்சேரிக்கு உட்பட்ட மாஹே பகுதியிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டசுகாதாரப் பணியாளர்களை மீண்டும் பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும். ஒரு ஆண்டுக்கு மேல் மாஹே பகுதியில்,பணியாற்றிய நர்ஸ்களுக்கு மீண்டும் பாண்டிச்சேரியில் வந்து பணிபுரிய இடமாற்ற உத்தரவுகள்பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதை அமல்படுத்தாமல் அரசு உள்ளது.
அரசின் தவறான இடமாற்றல் கொள்கையினால் நர்ஸ்கள் உள்பட சுகாதாரத் துறை ஊழியர்களின் குடும்பங்கள்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.
கடந்த வாரம் இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய நர்ஸ்கள் சங்கத்தின் பாண்டிச்சேரி பிரிவு சார்பில்தர்ணாப் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications