சிறாவயல் ஜல்லிக்கட்டில் 54 பேர் காயம்
திருப்பத்தூர்:
சிறாவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடு முட்டி 54 பேர்காயமடைந்தனர். 5 பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் வீர விளையாட்டு மஞ்சுவிரட்டுஎன்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றது அலங்காநல்லூர்.அதற்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்குஅருகில் இருக்கும் சிறாவயல்.
சிறாவயலில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக திருச்சி, சிவகங்கை,ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200-க்கும்அதிகமான காளைகள் அழைத்து வரப்பட்டன.
பரபரப்பான இந்த வீரவிளையாட்டைக்காண தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
இந்த காளைகளுக்கு கிராமத்தின் சார்பில் துண்டு அனிவிக்கப்பட்டு ஜல்லிக்கட்டுக்காகஅவிழ்து விடப்பட்டன. காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. இந்த காளைகளை அடக்கமுறுக்கேறிய வாலிப இளங்காளைகள் களத்தில் புகுந்தனர். காளைகள் இவர்களிடம்சிக்காமல் எதிரில் வந்தவர்களை முட்டித்தள்ளி தப்பி ஓடின.
இந்த வீர விளையாட்டில் காளை முட்டியதில் 54 பேர் காயமடைந்தனர். இவர்களில் 5பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications