அடையாள அட்டை .. "கட்டாயப்படுத்த வேண்டாம்
மதுரை:
சட்டசபைத் தேர்தலுக்கு வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்கும் முடிவைமறு பரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டைகட்டாயமாக்கப்படும் எனவும், வாக்காளர் அடயாள அட்டை இல்லாமல் யாரும்வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும் எல்லா வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் மூலம் வாக்குபதிவு நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இந்த இரண்டு முடிவையும் மறு பரிசீலனை செய்யுமாறு புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கிராமப் பகுதியில் வாழும் தலித்களில்10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைவழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்குமின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை உபயோகிக்கும் முறை தெரியாது. அதுஅவர்களுக்கு பிரச்சனையாக அமையக் கூடும்.
புதிய தமிழகத்தின் தேர்தல் செயல்பாடுகள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்அறிவிக்கப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications