மாவட்ட எல்லைகளை புறக்கணிக்கும் பாஸ்வான்
மதுரை:
200 கிலோ மீட்டர் சுற்றளவு வரை தொலைபேசிகளில் "லோக்கல் கால் வசதியைமாநில எல்லைப் பகுதி மாவட்டங்களில் வசிப்பவர்கள் பெற முடியாது என தமிழகதொலைபேசித் துறை தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சன்சார் நெட் என்ற இன்டர்நெட் மையத்தை திறந்து வைத்தார் சென்னைதொலைபேசித்துறை பொது மேலாளர் முகமது யாசின். பின்னர் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், மத்திய அரசு சமீபத்தில் 200 கி.மீ சுற்றளவில் லோக்கல் கால்வசதியில் பேசலாம் என அறிவித்திருந்தது. இது இந்த மாதம் 26-ம் தேதி, குடியரசுதினம் மூலம் அமலுக்கு வருகிறது.
ஆனால் இந்த திட்டம் மாநில எல்லை மாவட்டங்களில் வாழ்பவர்களுக்குபொருந்தாது. அவர்கள் எஸ்.டி.டி வசதியைத்தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும.
சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் அடுத்த மாத இறுதிக்குள் செல் போன்இணைப்புகள் இந்திய தொலை தொடர்பு துறையால் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
டிசம்பர் மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் செல் போன் இணைப்புகள்வழங்கப்படும். இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் தனியார் வசூலிப்பதைவிடகுறைவாக இருக்கும் என கூறினார்.












Click it and Unblock the Notifications