3 எம்.எல்.ஏக்களின் பதவி நீக்கம் சரியே.. பாண்டி. சபாநாயகர்
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபையிலிருந்து மூன்று தமிழ் மாநில காங்கிரஸ் (மனோகர் பிரிவு) எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம்செய்ததில், உள்நோக்கம் எதுவும் கிடையாது என்று பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியம்கூறியுள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மனோகர், ஏழுமலை, ராஜசேகரன்ஆகிய மூவரும், தங்களைப் பதவிநீக்கம் செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதற்குப்பதிலளித்து சுப்ரமணியம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது.
எனக்கு எதிராக மூன்று எம்.எல்.ஏக்களும் கூறியுள்ள புகார்கள் பொய்யானவை. அரசியல் உள்நோக்கம்கொண்டவை. இந்தப் புகார்கள் அனைத்தும் தேவையில்லாதது. சட்டப்படியோ, உண்மையின் அடிப்படையிலோஇவை கூறப்படவில்லை.
நான் ஆளும் கட்சி (காங்கிரஸ்)யைச் சேர்ந்தவன் என்பதால் வேண்டுமென்றே இந்தப் புகார்கள் கூறப்பட்டுள்ளன.நானோ அல்லது எனது அலுவலகமோ எந்தவிதமான தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எனக்குக்கிடைத்த தகவல்கள், விசாரணையில் தெரிய வந்த உண்மைகளின் அடிப்படையிலேயே மூன்றுஎம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்தேன்.
அரசியல் சட்டப்படியே இந்த நடவடிக்கையை எடுத்தேன். அரசியல் சட்டத்தின் 10-வது விதிக்குட்பட்டே இந்தநடவடிக்கை அமைந்துள்ளது. எனவே மூன்று எம்.எல்.ஏக்களின் மனுவை கோர்ட் நிராகரிக்க வேண்டும் என்றுகூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications