For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கைத் தமிழர் கைது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவிலிருந்து போலி தஸ்தாவேஜூகளுடன் கியூபா செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரை டெல்லி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள வசந்த விஹார் பகுதியில் உள்ள கியூபா தூதரகம் அருகே அவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் விக்டர் ஆனந்த செலன் என்ற ரூபென்.

இலங்கையில் தனி ஈழம் கிடைக்க வேண்டி 17 வருடங்களாகப் போராடி வரும் விடுதலைப்புலிகளுடன் இவருக்குத் தொடர்பு இருக்குமா என்று போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர் தனது பாஸ்போர்ட்டில் தனது பெயர் குப்புசாமி வினோத் என்றும், சென்னையைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவருக்குப் போலிதஸ்தாவேஜூகள் தயாரித்துக் கொடுத்தது தொடர்பாக சென்னையில் உள்ள டிராவல் ஏஜன்சியில் வேலை செய்து வரும் சுபா ராஜ் என்பவரையும் போலீஸார்கைது செய்தனர்.

இவர் சென்னை தாஸ் டிராவல் ஏஜன்சியில் வேலை செய்து வந்தார். அந்த டிராவல் ஏஜன்சியினர் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு வேறு நாடுகளுக்குச்செல்வதற்கு போலி இந்திய பாஸ்போர்ட் மற்றும் தஸ்தாவேஜூகளைத் தயாரித்து கொடுத்து வந்தனர்.

சுபா ராஜ், ஒரு பயணிக்கு ரூ 10,000 என்ற பணம் வசூல் செய்து போலி பாஸ்போர்ட்டுக்ள் தயாரித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X