திருப்பூரில் ரூ 1.20 கோடியில் "இன்டோர் ஸ்டேடியம்
திருப்பூர்:
திருப்பூரில் உள் விளையாட்டரங்கம் (இன்டோர் ஸ்டேடியம்) அமைக்க, மத்திய அரசு ரூ 1.20 கோடி நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம், திருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருப்பூரில் அகில இந்திய அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாமுழுவதிலும் இருந்து பல்வேறு மாநில விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் இங்கு உள்விளையாட்டரங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
இதனை பரிசீலனை செய்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இங்கு விளையாட்டரங்கம் கட்டிக் கொள்ளஅனுமதி அளித்துள்ளது. இதற்காக அரசு 9 ஏக்கர் நிலப் பரப்பையும் ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ. 1.20 கோடியில்உருவாகும் இந்த அரங்கிற்கு மத்திய அரசு தனது பங்காக ரூ. 60 லட்ச ரூபாய் அளிக்கவுள்ளது.
மீதமுள்ள தொகையை மாநில அரசு அல்லது விளையாட்டு மேம்பாட்டுக் கழகமோ முதலீடு செய்ய வேண்டும்.எனவே, இந்த முதலீட்டுத் தொகையை பெற திருப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதனால் ரூ. 50 லட்ச ரூபாய் திரட்ட முடியும். இது தவிர விளையாட்டு அரங்கில் 5 நுழை வாயில்கள்அமைக்கப்படும். ரூ. 10 லட்ச ரூபாய் தொழிலதிபர்கள் நன்கொடை கொடுத்தால் அவரது பெயர் அந்தநுழைவாயிலுக்குச் சூட்டப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications