விபூதியில் கஞ்சா .. ஸ்ரீவில்லிபுத்தூர் "ஸ்டைல்
விருதுநகர்:
விபூதிப் பொட்டலங்களில் கஞ்சா வைத்து கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் சாமியார் கைதுசெய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் காடனேரியியை சேர்ந்தவர் சேவுகன் (40). இவர் காவி உடைதரித்து சடை முடியுடன் சாமியார் போல் தோற்றமளித்து வந்தார். தன்னிடம்வருபவர்களின் நோய்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து வந்தார்.
இவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார்அவர் போகுமிடமெல்லாம் அவரை தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இந்த சாமியார் சென்றார். போலீசாரும் அவரைபின் தொடர்ந்து சென்றனர். அங்கு தன்னை சந்தித்த பக்தர்களுக்கு அவர் விபூதிபொட்டலங்கள் கொடுத்தார். அதை வாங்கி போலீசார் பரிசோதித்த போது அதில்விபூதியுடன் கஞ்சாவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சாமியார் விலைக்குவிற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
சாமியாரை மது விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.சாமியாரிடமிருந்து 15 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர்சாமியார் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் காவலில்வைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications