ராமேஸ்வரம் கும்பாபிஷேகம் .. பணிகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 5 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படஇருக்கிறது.

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதஸ்வாமி கோயிலில் 26 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தமாதம் 5-ம் தேதிகும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் ரூ 2 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளன.

கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கோவிலின் இணை ஆணையர் பக்கிரிசாமி கூறுகையில், கும்பாபிஷேகத்தைக்காண மத்திய, மாநில அமைச்சர்கள், ஆன்மிக பெரியார்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது. ஏழை பக்தர்கள் தங்குவதற்காக பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மடம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் 29-ம் தேதி முதல் தினமும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய மலேசிய தொழிலதிபர்செல்லையா முன் வந்துள்ளார். கும்பாபிஷேகத்தன்று பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க சிலதொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர். யாகசாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+