வேட்பாளர் தேர்வுக்குத் தயாராகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள பொதுச்செயலாளர் ஜெயலலிதா தற்போது வேட்பாளர்களைத்தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்.

இதுகுறித்து புதன்கிழமை சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள் வரும் 29 ம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி மாதம் 6 ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கப்படும். சட்டசபைத் தேர்தலில்போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பப்படிவங்கள் தலைமைக்கழகத்தில் வழங்கப்படும்.

தமிழகத்தில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ 10,000 செலுத்தியும், புதுவையில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ 7,000 செலுத்தியும் விண்ணப்பப்படிவங்களைப் பெறலாம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+