For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் அடித்து மாணவி சாவு?

By Staff
Google Oneindia Tamil News

ஆரணி:

ஆசிரியர் அடித்ததால், மாணவி இறந்ததாக போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாகஆசிரியரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஆரணி என்ற ஊருக்கு அருகே உள்ள சந்தவாசல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (14). இவர் அப்பகுதியில்உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வந்தார்.

செவ்வாய்க்கிழமை பள்ளியில், காயத்ரியிடம், சில கேள்விகளை தமிழ்ஆசிரியர் உலக நாதன் கேட்டுள்ளார்.காயத்ரி அதற்கு சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவரை, ஆசிரியர்கண்டித்துள்ளார். அடித்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே காயத்ரி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் வகுப்பறையிலேயேஅவர் மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த மாணவி இறந்து விட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X