புதிய பாரதத்தை உருவாக்குவோம்... மூப்பனார்
சென்னை:
புத்தாயிரம் ஆண்டின் முதல் குடியரசு தினவிழாவில் புதிய தமிழகத்தையும், புதிய பாரதத்தையும் உருவாக்குவோம் என்று இளைஞர்கள் சபதம் எடுக்க வேண்டும்என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வெள்ளிக்கிழமை கூறினார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியாவின் 52 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அதில் கலந்து கொண்ட மூப்பனார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விட்டு பேசுகையில், பல்வேறு இன்னல்களைத் தாண்டி நாம் இன்று நாட்டின் 52 வதுகுடியரசு தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
புத்தாயிரம் வருடத்தின் முதல் குடியரசு தினமான இன்று இளைஞர்கள், புதிய பாரதத்தையும், புதிய தமிழகத்தையும் உருவாக்குவோம் என்று சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வன்முறை, ஜாதி மத வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்மூப்பனார். பின்னர் அவர் கட்சித் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications