தலைநகரிலிருந்து குஜராத்துக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் மாநிலம் பகுஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்கள் பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால்தலைநகர் டெல்லியிலிருந்து ராணுவ வீரர்கள், மருத்துவ சாதனங்கள், கிரேன்கள் மற்றும் டாக்டர்களுடன் சிறப்பு விமானம் மூலம் சனிக்கிழமைகுஜராத் விரைந்துள்ளனர்.

பகுஜ் மற்றும் அகமதாபாத் நகரங்களில் தனித்தனியே கன்ட்ரோல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் உதவிதேவைப்பட்டால் உடனடியாக கன்ட்ரோல் அறைக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

மேலும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ, விமானப்படை வீரர்களும் உடனுக்குடன் கன்ட்ரோல் அறைகளைத் தொடர்பு கொண்டு விவரங்களைத்தெரிவிப்பார்கள்.

இதுவரை பகுஜ் மாவட்டத்தில் 3,500 சடலங்களும், அகமதாபாத் மாவட்டத்தில் 1,200 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஐ.நா.உதவியுடன் இந்திய - தலிபான் எல்லைப் போலீஸார், 4,000 கம்பளிகள், 1 டன் எடையுள்ள உணவுப் பொட்டலங்கள் மற்றும் தேவைப்படும் இதரபொருட்களை எடுத்துக் கொண்டு குஜராத் விரைந்துள்ளனர்.

பூனாவிலிருந்து நான்கு டாக்டர்கள் குழுக்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் குஜராத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து வருகின்றன.பூனா, சண்டிகார், ஜோத்பூர் பகுதிகளிலிருந்து ஏர் கம்ப்ரஸர், கிரேன்கள், குடிநீர் விநியோக அடிபம்ப்புகள், இடிந்த கட்டிடத்தை சரிசெய்து சடலங்களை மீட்கும்இயந்திரங்கள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+