பூகம்பம்: நிதி திரட்ட மா.கம்யூ.முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிதிரட்டவிருக்கிறது.
வெள்ளிக்கிழமை இந்தியாவின் பல பகுதிகளிலும் பூகம்பம் ஏற்பட்டது. குஜராத் மாநிலம் இதில் கடுமையாகபாதிக்கப்பட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை நேரத்திற்கு நேரம் அதிகரித்து வருகிறது.
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அடுத்த மாதம் மாநில அளவில் நிதி திரட்டுவதெனதமிழக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் சங்கரய்யா கூறியதாவது:
பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி திரட்டுவது குறித்த முடிவு கட்சியின் மாநில உயர்மட்ட குழுவின்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பூகம்பத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல்தெரிவிக்கப்பட்டது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications