மணி மண்டப திறப்பு விழாவில் முதல்வர்
சென்னை:
சென்னையில் ரூ 33 லட்சம் செலவில் மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
தமிழக அரசு சார்பில் தியாகிகள் மணி மண்டபம் ரூ 33 லட்சம் செலவில் கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழாவில் முதல்வர் கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.மணிமண்டபத்தில் 177 தியாகிகளின் உருவப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், பாரதிதாசன், கி.ஆ.பெ. விஸ்வநாதன் உள்ளிட்ட 43 பேரின் உருவபடங்களும் இடம்பெற்றுள்ளன. பெரியாரும், அண்ணாவும் பேசிக் கொண்டிருப்பது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது.
மொழிப்போர் தியாகிகளின் படம் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கோ.சி. மணி,வீரபாண்டி ஆறுமுதம் உள்ளிட்ட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications