காஷ்மீரில் தொடரும் தீவிரவாதம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
காஷ்மீரில், நீலு குல்கம் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமை தகர்ப்பதற்காக தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டுகள், நீர்த்தொட்டிக்கு அருகில் விழுந்துவெடித்தன.
அவாமி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான, குல்ஷார் அஹ்மத் நெங்ரூ என்பவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
இதற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை. விடுதலையான தீவிரவாதி அஸாருல் ஹக், என்பவர் பாரமுல்லா மாவட்டத்தில்கொல்லப்பட்டார். மற்றொரு, தீவிரவாதி முகம்மது அஸூர் பட் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இதனிடையில், ஹந்த்வாரா பகுதியில், நஷீர் அஹமது என்பவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை கோரிஇரண்டாம் நாளாக கடையடைப்பு நடைபெற்றது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications