தமிழக கொத்தடிமைச் சிறுவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த 23 தமிழக சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் சேலம், கரூர், விழுப்புரம், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் இருந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறிசிறுவர்களை அழைத்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் அவர்களை ஒரு கும்பல் விற்றுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்த சேலம் போலீசார் கர்நாடக அரசின் உதவியுடன் கர்நாடக மாநிலம், ஷிமோகா தாலுகாவில் இருந்து 23 தமிழக சிறுவர்களைமீட்டனர்.
இவர்கள் அனைவரும் அணைப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் அவர்களின் பெற்றோரிடம்ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications