இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்
சென்னை:
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தின் 11 வது சட்டசபையின் இறுதிக்கூட்டத்தொடர் கடந்த 19 ம் தேதி தொடங்கியது. முதல்நாள் கூட்டத்தில் கவர்னர் பாத்திமா பீவிஉரையாற்றினார்.
அதன்பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.
உறுப்பினர்களின் விவாதத்துக்கு வழக்கமாக முதல்வர்தான் பதில் அளித்துப் பேச வேண்டும். ஆனால் முதல்வருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால்அவரது சார்பில் கல்வி அமைச்சர் அன்பழகன் பதில் அளித்துப் பேசினார்.
வரும் ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதானவிவாதம் மறுநாள் செவ்வாய்க்கிழமைத் தொடங்கும். இக் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 2ம் தேதியுடன் முடிவடைகிறது.