அ.தி.மு.க. சார்பில் சசிகலா போட்டி?
சென்னை:
தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட தேவையான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் கட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுபூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாகவும், பாண்டிச்சேரி சட்டமன்றத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 7ஆயிரம் ரூபாய் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
திங்களன்று காலை 10 மணிக்கு தொடங்கும் விண்ணப்ப விநியோகத்தின் போது ஜெயலலிதா, சசிகலா, மற்றும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தஜெ.ஜெ.டி.வி.பாஸ்கரன், இளவரசி,மகாதேவன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கட்டணங்களைச் செலுத்தி பெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications