தாக்குதலைத் தொடர்வோம் ..சந்திரிகா மிரட்டல்
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், யாழ்ப்பாணம் மீதான தாக்குதலை நிறுத்துவோம். இல்லாவிட்டால்,போரைத் தொடர்வோம் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகஇருப்பதாகவும் பேச்சுவார்த்தை முடியும் வரை சண்டை நிறுத்தம் கிடையாது என்று சந்திரிகா தெரிவித்தார்.
தனி ஈழக் கோரிக்கையை விடுதலைப்புலிகள் கைவிட்டு தமிழ் மக்களின் மற்ற கோரிக்கை குறித்து குறிப்பிட்டகாலவரையறைக்குள் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ள காரணம் போரில் பெரும்பாலான புலிகளைஇழந்துவிட்டதாலும், பிரிட்டனில் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட இருப்பதாலும்தான் என்றார் அவர்.விரைவில் நார்வே நாட்டுத் தூதுக் குழுவினரை சந்திக்க இருப்பதாகவும் சந்திரிகா தெரிவித்தார்.