பூகம்ப பலி .. சட்டசபையில் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத் பூகம்பத்தில் இறந்து போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தமிழ்நாடுசட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த இரங்கல் தீர்மானமும்செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

குஜராத்தில் இறந்து போனவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தின்மீது பேசும் போது அவை முன்னவர் அன்பழகன் கூறியதாவது:

முதல்வர் கருணாநிதி நிவாரண நிதியாக அரசு சார்பில் ரூ 5 கோடி அனுப்பியுள்ளார்.இது ஒரு துவக்கமே ஆகும், மேலும் பல நிவாரண உதவிகள் அனுப்பப்படும்.

அரசு அலுவர்கள் தங்கள் 1 நாள் சம்பளத்தை குஜராத் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளார்கள்.

தமிழக தலைமைச் செயலாளரால் குஜராத் நில நடுக்க நிவாரண நிதிதுவக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் அனைவரும் கட்சி சார்பின்றி தாராளமாகநிதி வழங்கவேண்டும் என கூறினார்.

முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

குஜராத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் கடுமையானது. குஜராத்துக்கு அரசு உயிர்காக்கும் மருந்துகள், உணவு பொருட்கள், உடைகளையும் அனுப்பி வைக்கும். மேலும்மருத்துவர்களையும் குஜராத்துக்கு அனுப்பி வைக்கும் என கூறினார்.

தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் 1 மாத சம்பளத்தைகுஜராத் நிவாரண நிதிக்கு அளிக்க முன் வந்துள்ளனர்.

சட்டசபை எதிர்கட்சி தலைவர் சோ. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கட்சிபாகுபாடின்றி குஜராத் பூகம்பத்தில் இறந்து போன மக்களுக்குக்காக இரங்கல்தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்கள் 1 மாத சம்பளத்தை நிவாரண நிதிக்குவழங்குவதாகவும் கூறினர்.

அதன் பின் குஜராத்தில் இறந்து போன மக்களுக்காக சட்டசபை உறுப்பினர்கள் 1நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+