மத்திய அரசா, மாற்றாந்தாயா?
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
ராஜஸ்தானின் சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பாக்ராஜ் செளத்ரிமத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநிலம் காங்கிரசால்ஆளப்படுவதால் அதனிடம் மாற்றாந்தாய் போக்குடன் நடந்து கொள்கிறது என குறைகூறியுள்ளார்.
இது குறித்து அவர் திங்கள் கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைள் கூட மத்திய அரசால்நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கடந்த 3 ஆண்டுகளாக கடும் குடிநீர்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது,
ராஜஸ்தான் மாநில அரசு நிவாரண பணிகளுக்கு சென்ற ஆண்டில் மட்டும் ரூ 750கோடி செலவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு நிவாரண பணிகளுக்காக ரூ 100 கோடிமட்டுமே அளித்துள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications