For Quick Alerts
For Daily Alerts
Just In
அணித் தேர்வு திருப்தி தருகிறது .. கங்குலி
கொல்கத்தா:
சென்னை பயிற்சி முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி தனக்கு திருப்தி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் செளரவ் கங்குலிதெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பின் கொல்கத்தா திரும்பிய கங்குலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சுழல் பந்து வீச்சிற்குச் சாதகமான இந்திய மைதானங்களில் விளையாட முன்னணி வீரர் அனில் கும்ப்ளே இல்லாத நிலையில் புது முகங்களான தமிழகத்தின்பாலாஜி ராவ், காஷ்மீரின் சுரீந்தர் சிங் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாலஞ்சர் கோப்பை போட்டி மற்றும் சென்னை பயிற்சி முகாமில் திறமையை வெளிப்படுத்துபவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படும். டெஸ்ட்போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை என்று கங்குலி தெரிவித்தார்.
Comments
Story first published: Tuesday, January 30, 2001, 5:30 [IST]