பாக்.கிற்கு இந்தியா நன்றி
அகமதாபாத்:
பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளிலுமிருந்து, குஜராத் பூகம்ப நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளஇந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் வாஜ்பாய் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியைப் பார்வையிட்டபின் பிரதமர் வாஜ்பாய், நிருபர்களிடம் கூறியதாவது:
பூகம்பத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25, 000 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கில்அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பூகம்பத்தில் 55, 000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதும் உலக நாடுகள், போட்டிபோட்டுக் கொண்டு நிவாரண உதவிகள் செய்துவருகின்றன. பாகிஸ்தான், இந்தியாவுக்கு நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளது. பாகிஸ்தானின் உதவியைஇந்தியா ஏற்றுக் கொள்ளும் என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார், இஸ்லாமாபாத்திலிருந்துசெவ்வாய்க்கிழமை சிறப்பு விமானம் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு குஜராத் செல்லும் என்றுஅறிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications