நகராட்சி கமிஷனருக்காக ஒரு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நகராட்சி கமிஷனர் மீது பொய்யான புகார் பதிவு செய்ததைக் கண்டித்து, அம்மாநில நகராட்சிஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
2 நாட்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில், தூய்மையான பாண்டிச்சேரி என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது.இந்த நிகழ்ச்சியின்போது ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாக நகராட்சி கமிஷனர் அல்போன்ஸ் மீது போலீஸில்புகார் பதிவு செய்யப்பட்டது. இதைக் கண்டித்து, வியாழக்கிழமை, நகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.கமிஷனர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
நகராட்சி அலுவலக வளாகம் அருகிலும் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications