காஷ்மீரை மறைத்த குஜராத்
டெல்லி:
இந்தியப் பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் இடம் பெற்று வந்த காஷ்மீர் விவகாரம் மறைந்து போய் அந்த இடத்தில் குஜராத் பூகம்பம் இடம்பிடித்திருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பல மாவட்டங்கள், பல நகரங்கள், பல கிராமங்கள் உருக்குலைந்து போயின. உலக மக்களையேஅதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காஷ்மீரில் சண்டைநிறுத்தம் குறித்தோ, அங்கு நடந்து வரும் தீவிரவாதம் குறித்தோ மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பதில் கூற மறுக்கிறார்கள்.அதுமட்டுமின்றி காஷ்மீர் பிரச்சனையை ஒரு பெரிய பிரச்சனையாகவே அவர்கள் தற்போது கருதவில்லை.
மாறாக குஜராத் இப்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டை நிறுத்தம் மேலும் அடுத்த ஒரு மாதத்திற்குநீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள 2 நாட்களில் குஜராத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது.
ஒரு பக்கம் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு இருக்கும் போது, இன்னொரு பக்கம்குஜராத் மாநிலத்தையே உலுக்கி விட்டது பூகம்பம். இந்த பூகம்பத்தில் அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உயிரிழந்து விட்டனர்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் குறித்தான செய்திகளுக்கு முன்னால் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில சண்டை நிறுத்த நீட்டிப்பு,ஹூரியத் மாநாட்டு அமைப்பினரின் பாகிஸ்தான் பயணம் ஆகிய செய்திகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications