பருந்தை கோழியாக்கிய பலே கில்லாடி
Subscribe to Oneindia Tamil
அக்ரா (கானா):
அரிய வகை பறவையினமான பருந்துகளை, கோழி எனக்கூறி கடைகளுக்கு வழங்கியவரை கானா நீதிமன்றம் ஒன்று சிறைக்கு அனுப்பியது.
கானா நாட்டின் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பறவையினம் என அறிவிக்கப்பட்டது பருந்து. இந்தப் பருந்துகளை வேட்டையாடி, கோழிகள் எனக்கூறிகானா நாட்டின் இரண்டாவது பெரிய நகரான குமாஸி நகர ரெஸ்டாரெண்டுகளுக்கு விற்றுள்ளார் 37 வயது க்வாபெனா மனு என்பவர்.
இவரின் செயல் பற்றி அறிந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அவரைக் கைது செய்தனர். அவர் கொன்ற இரண்டு பருந்துகளையும்கைப்பற்றினர்.
மூலிகை வளர்ப்போர் சிலர் பருந்துகளின் தலைகளைக் கேட்டதால் இவற்றை பிடித்ததாகக் கூறும் அவரால் அவர்களைப்பற்றி தகவல் தெரிவிக்கமுடியவில்லை.












Click it and Unblock the Notifications